சொர்க்கம் நரகம்

சொர்க்கம் நரகம்.......

சொர்க்கம், நரகம்
செய்யும் கருவியை
நமக்குள் வைத்தான் இறைவன்!

சொர்க்கம் தேடும்
தேடலுக்குள்ளே
சிக்கி தவித்தான் மனிதன்!

இங்கோ? அங்கோ?
எங்கோ? என்று
தேடியலைந்தான் தெருவில்!

சொர்க்கம் மண்ணில்
இல்லை- அந்த
விண்ணில் என்றான் முடிவில்!

மரணவாசல் கடந்து
சொர்க்கம்
காணத்துடிபவன் கோழை!

மண்ணில் சொர்க்கம்
எங்கேயென்று
தேடியலைபவன் ஏழை!

புன்னகை செய்யும்
இதழ்களை  தேடி
சொர்க்கம் கொஞ்சம் நகரும்!

சோகம் கடலாய்
சூழ்ந்தவனுக்கு
சுழலும் பூமியே நரகம்!

2 comments: