Wednesday, November 12, 2014

Ellora சிற்பம்

Vizhi Moodi Yosithaal Audio

Film : Vizhi Moodi Yosithaal
Music : Mohammed Athif
Direction : KG Senthil Kumar
Lyrics : C.M.Lokesh
Singer : Reeta



பல்லவி


Ellora சிற்பம்
நா... நா... நான் தானே!
கள்ளோடை நானே!
களவாடும் கண்ணனே!

கால் கொண்ட சேலா? – ஹே!
நீ சொல் மன்மதா - ஹம்ம்ம்….
மல்யுத்தம் செய்யும்- ஒரு
மல்லிப் பூவடா!

நான்
தத்தி தாவும்- ஒரு
கிள்ளை!

தள்ளாட
செய்திடும் முல்லை!

ஆண்
வேங்கையை
வென்றிட
வந்த புள்ளி மான்
நான் தான்!
நான் தான்!

ஹே
தீரா!
தீயாய் எனை
வாட்டினாய்!

நீ
நீரா?
நீராட வந்தேன்
நான்!

நான்
வேறா?
உன் வேர் இனி
நானடா!

போர்
வீரா!
போர் செய்யும்
பூ நான் தான்!





சரணம் 1


வளைந்தாடும் பெண்மையை
கலைக் கண்ணால் காண வா
தலைக்கேறும் போதையில்
தலை சுற்றி போகலாம் வா!

மணம் வீசும் கூந்தலில்
மலர் வாசம் தேடி வா!
வன வாசம் செய்ய வா!- பெண்
உள்ளம் தின்னும் கள்வா!

புயல்
மையம் கொண்ட
விழி கண்டு

மனம்
மையல் கொண்டதோ
இன்று?

இரு
கண்களின்
கதிர் வீச்சிலே -இள
நெஞ்சம்
துண்டானதோ?

ஹே
தீரா!
தீயாய் எனை
வாட்டினாய்!

நீ
நீரா?
நீராட வந்தேன்
நான்!


சரணம் -2

கலைந்தோடும் மேகமாய்
நிலையற்ற வாழ்விலே
விதி செய்யும் சூழ்ச்சிகள்
அதை வெல்வதாரு இங்கே?

நதிநீரில் வெண்ணிலா
மிதந்தாட பார்க்கலாம்
களவாட எண்ணினால்- உன்
கையில் சேருமா சொல்?

ஒரு
ஆல கால விஷம்
போலே!
உனை மெல்லக்
கொன்றிடுவேனே!

இவள்
தீயவள்!- சுடும்
தீ இவள்! - உயிர்
கொள்ளை கொள்வாள்
இவள்!

(Ellora சிற்பம்.......)

No comments:

Post a Comment