Wednesday, November 12, 2014

ஜூலை காற்று

Vizhi Moodi Yosithaal Audio

Film : Vizhi Moodi Yosithaal
Music : Mohammed Aathif
Direction : K G Senthil Kumar
Lyrics : C.M.Lokesh
Singer : Deepak & Chinmayi


பல்லவி:


ஜூலை
காற்று
லேசாய் காதில்
உரைக்கும் உன் பெயரை!

மின்னும்
கண் ரெண்டும்
தூரம்
சென்றாலே
பெண்ணே! என்னை விலகும் என் மனம்

ஏன்
உயிரின் எடை கூட்டினாய்?
கனவெங்கும்
தீ மூட்டினாய்!

தொடுவானம்
தீண்டிவிட ஏங்கினேன்! - உன்
விழிகளில் பூட்டினாய்!

என் காதல் தீவில்
காற்றோடு வந்து
என் தேகம் தீண்டும்
மென் சாரல் நீ!

கண்ஜாடை கொண்டு
நெஞ்சோடு பேசி
என்னுள்ளே பாயும்
மின்சாரம் நீ!

Saalaa Saloothe

Vizhi Moodi Yosithaal Audio

Film : Vizhi Moodi Yosithaal
Music : Mohammed Aathif
Direction : KG Senthil Kumar
Lyrics : C.M.Lokesh
Singers : Deepak, Vikram &  Shakthisree Gopalan


பல்லவி

 ஆண்:

Saalaa Saloothe!!!
ஓன்றாய் வென்றோமே!
பொங்கும் நம் உள் நெஞ்சம் - ஒரு
Champagne போலே!

வெற்றி கோப்பையில்
Vodka அடிப்போம்!
விண்ணெங்கும் மிதப்போம்
ஒரு மேகம் போலே!

செவ்வாயில் தண்ணீர் கிடைத்தால்
எவனுக்கென்ன லாபம்?
Tasmac’இல் Chill Beer தீர்ந்தால்
தகிட தோம் தகிட தோம் தத்தித்த தீம் தோம் தோம்!

எல்லை கோடே இல்லை!- நம் வாழ்வில்
எதிலும் தோல்வி இல்லை!- ஹே! சாலா! சாலா!
சேர்ந்தோம் cocktail போலே- நம் நட்பில்
பேதம் ஏதும் இல்லை… லை… இல்லை…




சரணம் 1:


ஆண்:

அடடா! Friend’ம் சரக்கும்!
முதல்நாள் புதுசாய் இருக்கும்!
இரண்டும் உயிர் உள வரை நமை
விட்டு போக மறுக்கும்!

பெண்:

Professor பேசிடும் பொழுது
முழுசாய் கவனிக்க பழகு
அதைப் போல் மயக்கங்கள் கொடுத்திடும்
போதை ஏது? பதில் கூறு!

ஆண்:

Columbus
காணாத
தேசம் ஒன்றை தேடி
கால்கள்
பதிப்போம்!

பெண்:

Madonna
Michael Jackson னும்
பாடா கானம் ஒன்றை
பாடுவோம்!

ஆண்:

Elliots Beach’ல்
Saturday Party!

பெண்:

Leave வே இல்லை
Sunday வும் செய்வோமே லூட்டி.... Always On Duty....


சரணம் 2:

பெண்:

அழைத்தால் வான்மழை பொழிய
நினைத்தால் நிலவுகள் உதிக்க
நமக்காய் தனி ஒரு உலகினை
இன்பம் கொண்டு படைப்போம்!

ஆண்:

இருக்கும் நாட்களை ரசிப்போம்!
இடுக்கண் வருகையில் புகைப்போம்!
குடிக்கும் பொழுதினில் நமை தொட
சோகம் கூட பயம் கொள்ளும்!

பெண்:

இப்போதே!
இப்போதே!
உந்தன் கோப்பை தன்னை
தூரம் எறிவாய்!

ஆண்:

இப் போதை
தப்பே இல்லை
பானம் தந்த
ஞானம்
வானமாய்!

பெண்:

பேச்சில்
உனையே
வென்றவர்
இல்லையே!

ஆண்:

என்றும்
நான் தான்
வெற்றிக்கு
செல்லப் பிள்ளையே!.... தோற்பதில்லையே!

Ellora சிற்பம்

Vizhi Moodi Yosithaal Audio

Film : Vizhi Moodi Yosithaal
Music : Mohammed Athif
Direction : KG Senthil Kumar
Lyrics : C.M.Lokesh
Singer : Reeta



பல்லவி


Ellora சிற்பம்
நா... நா... நான் தானே!
கள்ளோடை நானே!
களவாடும் கண்ணனே!

கால் கொண்ட சேலா? – ஹே!
நீ சொல் மன்மதா - ஹம்ம்ம்….
மல்யுத்தம் செய்யும்- ஒரு
மல்லிப் பூவடா!

நான்
தத்தி தாவும்- ஒரு
கிள்ளை!

தள்ளாட
செய்திடும் முல்லை!

ஆண்
வேங்கையை
வென்றிட
வந்த புள்ளி மான்
நான் தான்!
நான் தான்!

ஹே
தீரா!
தீயாய் எனை
வாட்டினாய்!

நீ
நீரா?
நீராட வந்தேன்
நான்!

நான்
வேறா?
உன் வேர் இனி
நானடா!

போர்
வீரா!
போர் செய்யும்
பூ நான் தான்!





சரணம் 1


வளைந்தாடும் பெண்மையை
கலைக் கண்ணால் காண வா
தலைக்கேறும் போதையில்
தலை சுற்றி போகலாம் வா!

மணம் வீசும் கூந்தலில்
மலர் வாசம் தேடி வா!
வன வாசம் செய்ய வா!- பெண்
உள்ளம் தின்னும் கள்வா!

புயல்
மையம் கொண்ட
விழி கண்டு

மனம்
மையல் கொண்டதோ
இன்று?

இரு
கண்களின்
கதிர் வீச்சிலே -இள
நெஞ்சம்
துண்டானதோ?

ஹே
தீரா!
தீயாய் எனை
வாட்டினாய்!

நீ
நீரா?
நீராட வந்தேன்
நான்!


சரணம் -2

கலைந்தோடும் மேகமாய்
நிலையற்ற வாழ்விலே
விதி செய்யும் சூழ்ச்சிகள்
அதை வெல்வதாரு இங்கே?

நதிநீரில் வெண்ணிலா
மிதந்தாட பார்க்கலாம்
களவாட எண்ணினால்- உன்
கையில் சேருமா சொல்?

ஒரு
ஆல கால விஷம்
போலே!
உனை மெல்லக்
கொன்றிடுவேனே!

இவள்
தீயவள்!- சுடும்
தீ இவள்! - உயிர்
கொள்ளை கொள்வாள்
இவள்!

(Ellora சிற்பம்.......)

ஜில்லென்ற மேகம்

Vizhi Moodi Yosithaal Audio
Film          : Vizhi Moodi Yosithaal
Music       : Mohammed Aathif
Direction   : K G Senthil Kumar
Lyrics        : C.M.Lokesh
Singer        : Karthik




பல்லவி

ஜில்லென்ற மேகம் - என்
ஜன்னலின் ஓரம்
சாரல்கள் தூவ
கண்டேன் உன்னை நான்!

வானவில் வண்ணம்!- மென்
பூக்களில் தேகம்!
மின்னலின் பிம்பம்! - ஒரு
பெண்ணில் கண்டேன் நான்!

தொலைவில் பார்த்தே
தொலைந்து போகிறேன்
திருடி சென்றவள்
நீயடி!

விழிகள் கொண்டே
வருடி செல்கிறாய்
மனமெல்லாம் தீயடி!

எ... ஹே ... ஹே ...

உன் மௌனத்தினால்
என் இதயத்திலே
உன் நினைவினை
நீயே வரைகிறாய்!

ஏன்?
என் கனவுகளில்
என் கவிதைகளில்
ஓர் உயிரென
நீயே நிறைகிறாய்?... ஏன்?


சரணம்-1


உன்பார்வை தீண்டும் நொடியில்!
என்ஜீவன் தீயின் மடியில்!
என்னாகும் அய்யோ முடிவில்?
பெண்ணே கொல்லாதே!

ஓ!... ஓ!.... ஓ!....

உயிர்தீண்டும் காதல் மழையே!
சதைகொண்ட செல்லப் பிழையே!
இதுஎவரும் காணா நிலையே
உன்னால் கண்டேனே!

மெதுவாய் ! தீப் போல்
என் அணுக்களில் நுழைந்தாய்!
மெழுகாய் உயிரினை
உருக்கிட துடித்தாய்!

நீயென்னை கடந்தால்
எனைசுற்றி எங்கும் பூ வாசம்.............வீசும்!

ஒ!... ஓ!.... ஓ!....

உன் மௌனத்தினால்
என் இதயத்திலே
உன் நினைவினை
நீயே வரைகிறாய்!

ஏன்?
என் கனவுகளில்
என் கவிதைகளில்
ஓர் உயிரென
நீயே நிறைகிறாய்?


சரணம்-2


கண் காணும் யாவும் புதுமை
கள்ளூர செய்யும் இளமை
என்றாலும் கொல்லும் தனிமை
நெஞ்சம் மீளாதோ???

ஓ!... ஓ!.... ஓ!....

காதோடு கொஞ்சும் சிணுங்கள்
நெஞ்சோடு கொஞ்சம் ரணங்கள்
உன்னோடு வாழும் கணங்கள்
இன்னும் நீளாதோ???

முதல்நாள் பார்த்தேன்
என் முகவரி மறந்தேன்!
நெடுநாள் உன்னருகே
வசித்திட துடித்தேன்!

நீ வரம் கொடுத்தால்
சில ஜென்மம் உந்தன் தோள் சாய்வேன்!..... பூவே!