Wednesday, November 12, 2014

ஜில்லென்ற மேகம்

Vizhi Moodi Yosithaal Audio
Film          : Vizhi Moodi Yosithaal
Music       : Mohammed Aathif
Direction   : K G Senthil Kumar
Lyrics        : C.M.Lokesh
Singer        : Karthik




பல்லவி

ஜில்லென்ற மேகம் - என்
ஜன்னலின் ஓரம்
சாரல்கள் தூவ
கண்டேன் உன்னை நான்!

வானவில் வண்ணம்!- மென்
பூக்களில் தேகம்!
மின்னலின் பிம்பம்! - ஒரு
பெண்ணில் கண்டேன் நான்!

தொலைவில் பார்த்தே
தொலைந்து போகிறேன்
திருடி சென்றவள்
நீயடி!

விழிகள் கொண்டே
வருடி செல்கிறாய்
மனமெல்லாம் தீயடி!

எ... ஹே ... ஹே ...

உன் மௌனத்தினால்
என் இதயத்திலே
உன் நினைவினை
நீயே வரைகிறாய்!

ஏன்?
என் கனவுகளில்
என் கவிதைகளில்
ஓர் உயிரென
நீயே நிறைகிறாய்?... ஏன்?


சரணம்-1


உன்பார்வை தீண்டும் நொடியில்!
என்ஜீவன் தீயின் மடியில்!
என்னாகும் அய்யோ முடிவில்?
பெண்ணே கொல்லாதே!

ஓ!... ஓ!.... ஓ!....

உயிர்தீண்டும் காதல் மழையே!
சதைகொண்ட செல்லப் பிழையே!
இதுஎவரும் காணா நிலையே
உன்னால் கண்டேனே!

மெதுவாய் ! தீப் போல்
என் அணுக்களில் நுழைந்தாய்!
மெழுகாய் உயிரினை
உருக்கிட துடித்தாய்!

நீயென்னை கடந்தால்
எனைசுற்றி எங்கும் பூ வாசம்.............வீசும்!

ஒ!... ஓ!.... ஓ!....

உன் மௌனத்தினால்
என் இதயத்திலே
உன் நினைவினை
நீயே வரைகிறாய்!

ஏன்?
என் கனவுகளில்
என் கவிதைகளில்
ஓர் உயிரென
நீயே நிறைகிறாய்?


சரணம்-2


கண் காணும் யாவும் புதுமை
கள்ளூர செய்யும் இளமை
என்றாலும் கொல்லும் தனிமை
நெஞ்சம் மீளாதோ???

ஓ!... ஓ!.... ஓ!....

காதோடு கொஞ்சும் சிணுங்கள்
நெஞ்சோடு கொஞ்சம் ரணங்கள்
உன்னோடு வாழும் கணங்கள்
இன்னும் நீளாதோ???

முதல்நாள் பார்த்தேன்
என் முகவரி மறந்தேன்!
நெடுநாள் உன்னருகே
வசித்திட துடித்தேன்!

நீ வரம் கொடுத்தால்
சில ஜென்மம் உந்தன் தோள் சாய்வேன்!..... பூவே!

No comments:

Post a Comment